search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்சோவில் கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
    X

    போக்சோவில் கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

    • மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்
    • 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நடவடிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆற்காடு பகுதியை சேர்ந்த சந்திரன் (37), முனியாண்டி (55) ஆகிய 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்ப ட்டனர்.

    போக்சோவில் கைது செய்யப்பட்ட 2 பேரையும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பரிந்துரை செய்தார்.

    அதன்படி கலெக்டர் வளர்மதி, சந்திரன், முனியாண்டி ஆகிய 2 பேரையும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி 2 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×