என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரக்கோணம்-சோளிங்கர் நெடுஞ்சாலையில் கம்புகளை வைத்து மறியல்
    X

    அரக்கோணம்-சோளிங்கர் நெடுஞ்சாலையில் கம்புகளை வைத்து மறியல் செய்த காட்சி.

    அரக்கோணம்-சோளிங்கர் நெடுஞ்சாலையில் கம்புகளை வைத்து மறியல்

    • விபத்தில் பலியான தம்பதியின் குழந்தைகளுக்கு நிவாரணம் கேட்டு போராட்டம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த வேடல் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன் (வயது 37). இவர் தனது மனைவி ரூபாவதியுடன் நேற்று முன்தினம் மாலை வேடல் காந்திநகரில் இருந்து பைக்கில் அரக் கோணம் நோக்கி சென்று கொண்டி ருந்தார்.

    அப்போது பின்னால் வந்த சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தீனத யாளன், ரூபாவதி ஆகிய இருவரும் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    விபத்தில் பலியான தம்பதிகளுக்கு விக்னேஷ் (14), அர்ச்சனா (12), தர்ஷினி (8) என 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை வேடல் காந்தி நகர் கிராம மக்கள் திடீரென அரக்கோணம் - சோளிங்கர் நெடுஞ்சாலையில் கம்புகளை ரோட்டில் இருபுறமும் வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மறியலில் ஈடுபட்டவர்கள் கூறும்போது.

    சாலை விபத்தில் பலியான தீனதயாளன்- ரூபாவதி தம்பதிகளின் குழந்தைகளுக்கு அரசு மாத உதவித் தொகை, அவர்களின் வீட்டுக்கு மனை பட்டா, 18 வயது நிரம்பியதும் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் மூவருக்கும் அரசு சார்பில் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    தகவல் அறிந்து வந்த அரக் கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக், அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா, தாசில்தார் சண்முகசுந்தரம் மற்றும் அரக்கோணம் தாலுகா இன்ஸ்பெக்டர் பழனிவேல் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது கிராம மக்கள் விடுத்த கோரிக்கைகளை அர சுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

    இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் சுமார் 4 மணி நேரத்திற்கு பின் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள், பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    Next Story
    ×