search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது
    X

    குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

    • வேலூர் ஜெயிலில் அடைத்தனர்
    • சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் நடவடிக்கை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த சிறுகரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 48).

    இவர் அதே பகுதியில் உள்ள 8-ம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கடந்தமாதம் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    இவரின் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி பரிந்துரை யின்பேரில் கலெக்டர் வளர்மதி, மகேந்திரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    பின்னர் அவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×