என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கெங்கையம்மன் கோவில் திருவிழா
    X

    கெங்கையம்மன் கோவில் திருவிழா

    • சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா
    • ஏராளமான பத்தர்கள் தரிசனம்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது.

    கோவிலில் வைகாசி திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

    விழாவையொட்டி, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கெங்கையம்மனை தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் முதுகில் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடியும், தலைகீழாக தொங்கியும் அம்மனுக்கு ஆகாய மாலை அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பின்னர் இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார்.

    விழாவில் ஏராளமான பத்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×