என் மலர்
உள்ளூர் செய்திகள்

தலைமுடியை ஒழுங்காக வெட்ட வேண்டும்
- மாணவர்கள் குட்கா பயன்படுத்த கூடாது என அறிவுரை
- போலீசார் விழிப்புணர்வு
நெமிலி:
பாணாவரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போலீசார் சார்பில் போதைபொருள் பழக்க தடுப்பு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கோபி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா கலந்துகொண்டார்.
இதில் பாணாவரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜா மாணவர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு இவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே பள்ளி மாணவர்களாகிய நீங்கள் நல்ல முறையில் கல்வி கற்று வாழ்க்கையில் மேலும் சிறந்து விளங்க வேண்டும்.
இது போன்ற குட்கா பழக்கத்திற்கு ஆளாகாமல் விழிப்புடன் இருக்கவேண்டும். படிப்பு மட்டும் தான் வாழ்க்கையில் மென்மேலும் உயர உதவும்.
ஆசிரியர்களை மதிக்க வேண்டும். ஆசிரியர்கள் சொல்லித்தரும் பாடங்களை நன்கு கவனித்து, பெற்றோரின் கனவுகளை நனவாக்க நன்றாக படித்து உயர வேண்டும்.
மேலும் தங்கள் வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
குட்கா பொருட்கள் இல்லாத ராணிப்பேட்டை மாவட்டத்தை உருவாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தலைமுடியினை ஒழுங்காக வெட்டவேண்டும்.ஆடைகளை சரியான முறையில் அணிய வேண்டும்.
விளையாட்டிலே முக்கியத்துவம் கொடுத்து உயர்நிலைக்கு செல்லவேண்டும் என இவ்வாறு அவர் கூறினார். இதில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.






