search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
    X

    அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

    • நாளை மறுநாள் நடக்கிறது
    • கல்லூரி முதல்வர் தகவல்

    சோளிங்கர்

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை மறுநாள் தொடங்குகிறது.

    முதல் நாள் சிறப்பு பிரிவினர்களுக்கு மட்டும் அனைத்து இளநிலை பாடப்பிரிவுகளுக்கும், 11-ந் தேதி பி.எஸ்.சி கணினி அறிவியல் (கட் ஆப் மதிப்பெண் 400-ல் இருந்து 248 வரை), 12-ந் தேதி கணிதம் (கட் ஆப் 400 -ல் இருந்து 173 வரை) 16-ந் தேதி பி.காம் வணிகவியல் (கட் ஆப் 400-ல் இருந்து 231 வரை) 17-ந் தேதி பி. ஏ ஆங்கிலம் (கட் ஆப் 100 -ல் இருந்து 54),18-ந் தேதி பி.ஏ தமிழ் (கட் ஆப் 100 -ல் இருந்து 70 வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.

    கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் அனைத்து சான்றிதழ்களிலும் அசல் மற்றும் 5 நகல்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும் .சேர்க்கை பெற்ற மாணவர்கள் அன்றே சேர்க்கை கட்டணத்தை செலுத்த வேண்டும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×