என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் கெமிக்கல் நிறுவனத்தில் தீ விபத்து
    X

    தனியார் கெமிக்கல் நிறுவனத்தில் தீ விபத்து

    • 2 தொழிலாளிகள் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சத்ருகனா மோகபத்ரா (வயது 24), நிரஞ்சன் சிங் (25). இவர்கள் ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் உள்ள தனியார் கெமிக்கல் நிறுவனத்தில் கூலி தொழிலாளிகளாக பணிபுரிந்து வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று பணியின் போது, கெமிக்கல் பேரல்களை எடுத்தனர்.

    அப்போது எதிர்பாராதவிதமாக கெமிக்கல் கசிந்து தீப்பற்றி எரிந்தது.

    இதில் இவர்கள் 2 பேர் மீதும் தீ பரவியது உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×