என் மலர்
உள்ளூர் செய்திகள்

தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்
- தேர்தல் வாக்குறுகளை நிறைவேற்ற வலியுறுத்தல்
- கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் தே.மு.தி.க. சார்பில், தேர்தல் வாக்குறுதிப்படி அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்க வேண்டும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும், விளை நிலங்களை அழிக்கும் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டிப்பது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முத்துக்கடை பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் பி.ஆர்.மனோகர் தலைமை தாங்கி பேசினார்.
மாவட்ட அவை தலைவர் காசிநாதன், பொருளாளர் அசோகன், மாவட்ட துணை செயலாளர்கள் பிரபாகரன், தினேஷ்குமார் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில வர்த்தக அணி செயலாளர் சந்திரன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் போட்டனர்.






