என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரத்த தான முகாம்
- 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்தது
- 75 தொழிலாளர்கள் ரத்ததானம் வழங்கினர்
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் உள்ள அல்ட்ராமரைன் மற்றும் பிக்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். வடிவேலன், வைத்தியலிங்கம், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 75 தொழிலாளர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் அருள் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்துகொண்டனர். முடிவில் நிர்வாக மேலாளர் ரவி நன்றி கூறினார்.
Next Story






