என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுடுகாட்டுக்கு பாதை கேட்டு பிணத்துடன் சாலை மறியல்
    X

    சுடுகாட்டுக்கு பாதை கேட்டு பிணத்துடன் சாலை மறியல்

    • போக்குவரத்து பாதிப்பு
    • போலீசார் பேச்சுவார்த்தை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே மாங்காட்டுசேரிகிராமம் ஆதி திராவிடர் பகுதியை சேர்ந்த மக்கள் இறந்தவர்களின் உடல் களை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல பாதை வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சஞ்சீவி அம்மாள் (வயது 90) என்பவர் வயது மூப்பு காரணமாக மர ணம் அடைந்தார். அவரது உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல தனி நபரின் விவசாய நிலம் வழியாகதான் செல்ல வேண்டும்.

    இதனால் சுடுகாட்டுக்கு தனியாக பாதை வேண்டும் என கூறி திடீரென செல்லும் தக்கோலம் கூட் ரோட்டில் பிணத்தை வைத்து 60-க்கும் மேற்பட்ட பெண் களும், ஆண்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம், வாலாஜா ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் செல்வி, அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக், வருவாய் ஆய்வாளர் பிள்ளையார், கிராம நிர்வாக அலுவ லர்கள் திவாகர், நெடுஞ்செழி யன் மற்றும் தக்கோலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழ னிவேல், சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களி டம் பேச்சு வார்த்தை நடத்தி னர். அப்போது பாதை அமைக்க நடவடிக்கை எடுக் கப்படும் என்று உறுதியளித்தனர்.

    இதனையடுத்து மறியலை கைவிட்டு பிணத்தை கொண்டு சென்றனர். இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×