என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு காரணமாக விபத்துகள் குறைந்தன
- போலீஸ் அதிகாரிகள் தகவல்
- கடந்த மாத்தில் 76 சாலை விபத்து வழக்குகள் பதிவு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 76 சாலை விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளது. விபத்துகளில் 23 பேர் இறந்துள்ளனர். 69 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத் துகளை குறைப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு கிரண் ஸ்ருதி உத்தர வின் பேரில், மாவட்டம் முழுவதும் விபத்து ஏற்படும். இடங்களில் தடுப்புகள் மற் றும் ஆபத்துகள் பற்றிய எச்ச ரிக்கையை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் போக் குவரத்து கூம்புகள் வைக்கப் பட்டது.
மேலும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர் கள் மூலமாக பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிக ளுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும், ஹெல்மெட் அணி வதன் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்து மாறு உத்தரவிட்டிருந்தது.
இந்த நடவடிக்கைகள் மூல மாக மார்ச் மாதத்தில் சாலை விபத்து வழக்குகள் 40 ஆக குறைந்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆகவும், காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆகவும் குறைந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.






