search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக்கில் மணல் கடத்திய வாலிபர் கைது
    X

    பைக்கில் மணல் கடத்திய வாலிபர் கைது

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த மாமண்டூர் கிராமத்தில் அவளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கரிவேட்டான் கால்வாயிலிருந்து மூட்டையுடன் பைக்கில் வந்தவரை போலீசார் மடக்கினர். போலீசாரை கண்டதும் பைக்கை நிறுத்திவிட்டு அவர் தப்பி ஓடிவிட்டார்.

    போலீசார் பைக்கை பறிமுதல் செய்து சோதனை செய்தபோது, பைக் மூலம் மணல் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, மாமண்டூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த சின்னராசை (வயது 25) கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×