என் மலர்
உள்ளூர் செய்திகள்

காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்திய இளம்பெண்
- ேவறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு நடந்தது
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த பரதராமி கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரும் அதே கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இளம்பெண்ணை அந்த வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் இளம் பெண்ணுக்கு தெரியாமல் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் வாலிபருக்கும் திருமணம் நிச்சயம் செய்தனர்.அவர்கள் திருமணம் நேற்று ஆற்காடு அடுத்த விளாரி கூட்ரோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது.
இது குறித்து தகவலறிந்த வாலிபரின் காதலி நேற்று திமிரி போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். போலீசார் திருமண மண்டபத்திற்கு சென்று மணமகனை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதனால் களைகட்டி இருந்த திருமண மண்டபம் களை இழந்து திருமணத்திற்கு வந்தவர்கள் சோகத்தில் மூழ்கினர். நேற்று நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.
மேலும் இது குறித்து தொடர்ந்து போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






