என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின் கசிவால் குடிசை வீட்டில் தீ விபத்து
- பொருட்கள் எரிந்து நாசம்
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
பாணாவரத்தை அடுத்த பிள் ளையார் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயா (வயது 58), கூலித்தொழிலாளி. இவர் குடிசை வீட்டில் வசித்து வரு கிறார். இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு மின் கசிவு காரணமாக திடீரென குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது.
இது குறித்து அக்கம் பக்கத்தி னர் சோளிங்கர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரி வித்தனர். அதன்பேரில் தீய ணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடிசை வீட்டில் இருந்த சான்றிதழ்கள், துணிகள், பாத் திரங்கள் உள்ளிட்ட சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
இந்த சம்பவம் குறித்து தக வலறிந்த சோளிங்கர் ஒன்றி யக் குழு தலைவர் கலைக்கு மார், துணைத் தலைவர் பூங் கொடி ஆனந்தன், ஒன்றிய செயலாளர் சந்திரன் ஆகி யோர் சென்று பாதிக்கப் பட்ட குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள் ளிட்ட நிவாரண பொருட் களை வழங்கி ஆறுதல் தெரி வித்தனர், தீ விபத்து குறித்து பாணாவரம் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.






