search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
    X

    குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

    • கலெக்டர் வளர்மதி உத்தரவு
    • சிறையில் அடைப்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையை சேர்ந்தவர் பிரபாகரன் ( 29), கோவிந்தசேரிகுப்பம் கிராமத்தை சேர்ந்த கதிரவன் (19) இவர்கள் 2 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். இவர்களை வாலாஜா போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 பேர் மீதும் வாலாஜா போலீஸ் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்கு களும் நிலுவையில் உள்ளது.

    இதனால் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி கலெக்டர் வளர்மதியிடம் பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் வளர்மதி, 2 வாலிபர்களையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    Next Story
    ×