search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக செவிலியர் தின விருது வழங்கல்
    X

    உலக செவிலியர் தின விருது வழங்கல்

    • உலக செவிலியர் தின விருது வழங்கப்பட்டது.
    • செவிலியர் வீராம்மாள் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் முகவை தாய்ப்பாசம் அறக்கட்டளை சார்பில் கொரோனா நோய்த்தொற்று காலங்களில் பங்காற்றிய செவிலியர்களை கவுரவிக்கும் வகையில் அப்துல்லா விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் பாதுஷா நூருல் சமது தலைமை தாங்கினார். செவிலியர் ராஜசேகரன் வரவேற்றார். மருத்துவர் கண்ணகி முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக செய்யதம்மாள் அறக்கட்டளை தலைவர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா கலந்து கொண்டு விருதுகள் வழங்கினார். செவிலியர் கண்காணிப்பாளர் சரளா, இந்திராகாந்தி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். செவிலியர் வீராம்மாள் நன்றி கூறினார்.

    Next Story
    ×