search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
    X

    ராமநாதபுரம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வுக்கூட் டம் நடைபெற்ற காட்சி.

    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

    • வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    ராமநாதபுரம்

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

    இதனை தொடர்ந்து, ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவ மழையின் போது பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்க்கும் வகை யில் மேற்கொள்ள வேண் டிய பணிகள் குறித்த ஆய் வுக்கூட்டம் நகர்மன்ற கூட்டரங்கில் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம், ஆணையாளர் அஜிதா பர்வீன், துணைத்தலைவர் பிரவீன் தங்கம் மற்றும் பொறியாளர், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இதில், கனமழை பெய்த வுடன் மழைநீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அந்த பகுதியில் மழைநீர் தேங்காதவாறு கால்வாய் தூர்வார வேண்டும். நக ராட்சி பகுதியில் உள்ள 15 குளங்கள் மழை நீர் தேக்கி வைத்திடும் வகையில் கால் வாயை சீரமைக்க வேண்டும். தொற்று நோய் பரவாத வகையில் சுகாதார பணி களை மேற்கொள்ள வேண் டும் என ஆலோசனை வழங்கப்பட்டு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    Next Story
    ×