என் மலர்
உள்ளூர் செய்திகள்

தனுஷ்கோடி பகுதியில் அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். அருகில் காதர்பாட்சா எம்.எல்.ஏ., கலெக்டர் விஷ்ணு சந்திரன் உள்ளனர்.
தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்படும்
- தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- உத்தரகோசமங்கையில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் நடந்து வரும் பணிகளை அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் விஷ்ணு சந்திரன், சுற்றுலா துறை ஆணையர் சந்தீப் நந்தூரி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு ஓட்டல்கள், தனுஷ்கோடி ஹெலிகாப்டர் இறங்கும் தளம் அமைவிடம், அதனை தொடர்ந்து தனுஷ் கோடியில் உள்ள ஆங்கிலேயர் கால கட்டப் பட்ட தேவாலயம், அரிச்சல் முனை பகுதிகளில் அவர்கள் ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், மண்டபம், தனுஷ்கோடி, உத்திரகோசமங்கை ஆகிய பகுதிகளில் உள்ள சுற்றுலா துறைக்கு சொந்தமான இடங்கள் ஆய்வு செய்யப் படுகிறது. ராமேசுவரத்தில் புதிய தமிழ்நாடு ஓட்டல் அமைக்கவும், பழயை ஓட்டல்களை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தனுஷ்கோடியில் சிதிலமடைந்து காணப்படும் தேவாலயத்தை ரூ.5 கோடி மதிப்பில் பழமை மாறாமல் புனரமைக்க திட்டமிடப் பட்டுள்ளது.
தனுஷ்கோடி பகுதிக்கு ஆண்டிற்கு சுமார் 3 கோடியே 80 லட்சம் பேருக்கு மேல் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார் கள் என எதிர்பார்க்கப்படு கிறது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துவதற்கு ஆய்வு செய்யப்படுகிறது.
நடராஜபுரத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைப்பதற்கு 13.15 ஹெக்டர் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான அனுமதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
உத்தரகோசமங்கையில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., நகர் மன்ற தலைவர் நாசர் கான், தமிழ்நாடு சுற்றுலாத்துறை மண்டல மேலாளர்கள் டேவிட் பிரபு, ஜான், மாவட்ட சுற்றுலா அலுவலர் அருண் பிரசாத், ராமேசுவரம் நகராட்சி ஆணையர் கண்ணன், ராமேசுவரம் வட்டாட்சியர்கள் பால கிருஷ்ணன், அப்துல் ஜபார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






