search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழக்கரை செய்யது ஹமீதா கல்லூரியில் பட்டமளிப்பு விழா
    X

    கீழக்கரை செய்யது ஹமீதா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

    • கீழக்கரை செய்யது ஹமீதா கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
    • துணைவேந்தர், ரவி கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20-வது பட்டமளிப்பு விழா நடந்தது. முகமது சதக் அறக்கட்டளையின் இயக்குநர் பி.ஆர்.எல்.ஹாமீது இப்ராகிம் முன்னிலை வகித்தார். முதல்வர் சதக்கத்துல்லா வரவேற்புரை நிகழ்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர், ரவி கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.

    அப்போது அவர் பேசுகையில், பட்டம் பெறும் பட்டதாரிகள் தாங்கள் கற்ற கல்வியின் மேன்மையையும்,முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொண்டு சமூக சிந்தனையுடன் கூடிய அறிவுத்திறனுடன் செயல்பட வேண்டும். அனைவரும் சமுதாயத்தில் நற்குடிமகன்களாகவும் நமது நாட்டின் பெருமை பண்பாடு சமூக நெறி மற்றும் பாரம்பரியத்தை காக்க உறுதி கொள்ள வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் முகமது சதக் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல்திட்ட அலுவலர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதல்வர் சதக்கத்துல்லா பட்டமளிப்பு விழா உறுதிமொழி வாசிக்க பட்டதாரிகள் அதனை பின் மொழிந்தனர்.பல்கலைக்கழக அளவில் தரவரிசை பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பதக்கங்களும், பட்டங்களும் வழங்கப்பட்டது. இதில் 926 இளங்கலை மாணவ,மாணவிகளுக்கு 70 முதுகலை மாணவ,மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அனைத்து துறை பேராசிரியர்களும் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களும் செய்திருந்தனர்.விழாவிற்கு முகமது சதக் அறக்கட்டளை தலைவர் மற்றும் தாளாளர் முகமது யூசுப், முகமது சதக் அறக்கட்டளை கல்வி நிறுவனங்களின் செயலாளர் சர்மிளா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    Next Story
    ×