search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வணிக வளாக கட்டுமான பணிகளுக்கு அனுமதி பெறாவிட்டால் கடும் நடவடிக்கை
    X

    வணிக வளாக கட்டுமான பணிகளுக்கு அனுமதி பெறாவிட்டால் கடும் நடவடிக்கை

    • வணிக வளாக கட்டுமான பணிகளுக்கு அனுமதி பெறாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • தாசில்தார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கட்டுமான பணி, எச்சரிக்கை, Construction work, warning

    கீழக்கரை

    கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    கீழக்கரை நகராட்சியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. கீழக்கரை கடற்கரையில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரம் பெரிய கட்டுமானங்கள், வணிக வளாகங்கள் கட்டுவ தற்கு அனுமதி கிடையாது. இந்த நிலையில் தெரு பகுதி களில் வணிக வளாகங்கள் அமைப்பது குறித்து உரிய விதிமுறைகள் பின்பற்றி கட்டுமான பணிகளை மேற் கொள்ள வேண்டும்.

    புதிய கட்டுமான பணி களுக்கு அரசின் விதிமுறை கள் தெளிவாக வரையறுக் கப்பட்டுள்ளது. அதன் படி புதிதாக கட்டுமான பணி களில் ஈடுபடுபவர்கள் உரிய அரசு அனுமதி பெற்று கட்டு மான பணிகளில் ஈடுபட வேண்டும்.

    மேலும் விதி முறைகளை மீறி சட்டத்திற்கு புறம்பாக நகரில் அதிக உயரமான கட்டிடங்களை கட்ட கூடாது குறிப்பாக வணிக வளாகங்கள் உரிய அனுமதியோடு கட்ட வேண் டும். நகராட்சி விதிமுறை களை மீறி மிக உயரமான வணிக வளாகங்கள் ஏற் படுத்தியிருந்தால் அதற்கு உரியவர்கள் மீது சட்டரீதி யான நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    Next Story
    ×