search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு மருத்துவ முகாம்
    X

    மருத்துவ முகாம் நடந்தபோது எடுத்த படம்.

    சிறப்பு மருத்துவ முகாம்

    • கீழக்கரை அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    • மருத்துவக் குழுவினர் 400-க்கும் மேற்பட்ட நோயாளிகளை பரிசோதனை செய்து மருந்து, மாத்திரை வழங்கினர்.

    கீழக்கரை

    கீழக்கரை அரசு ஆஸ் பத்திரியில் முதல்-அமைச் சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் யோஜ னா திட்டத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் சகாய ஸ்டீபன் ராஜ் அறிவுறுத்தலின் பேரில் கீழக்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜவாஹிர் உசேன் தலைமையில் நடந் தது.

    இம்முகாமில் டாக்டர்கள் பிரவீன் ராஜ்(பொது), சரத் குமார் (அறுவை சிகிச்சை நிபுணர்), பிரகாஷ் (எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை) ராஜ வசந்த குமாரி(பெண்கள் நலம்) ஆகியோர் கலந்து கொண்டு இலவச மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் ஏராளமானோருக்கு இலவச இ.சி.ஜி., எக்ஸ்ரே சோதனை நடந்தது.

    மேலும் முதல்-அமைச்சர் காப்பீடு, பிரதமர் காப்பீடு திட்டத்திற்கானபுதிய மருத் துவ காப்பீட்டு திட்டம் பதிவு நடைபெற்றது. இஸ் லாமியா மெட்ரிக்.மேல் நிலைப்பள்ளி பிளஸ்-1 மாணவர்கள் மருத்துவ முகாமிற்கு வந்த பொது மக்களுக்கு உதவி புரிந்தனர். மருத்துவக் குழுவினர் 400-க்கும் மேற்பட்ட நோயாளிகளை பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கி மருந்து, மாத்திரை வழங்கினர்.

    Next Story
    ×