என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பணம் தராததால் தாயை அடித்து கொன்றேன்-மகன்
- பணம் தராததால் தாயை அடித்து கொன்றேன் என்று கைதான மகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
- கட்டிலில் பிணமாக கிடந்தார்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே தளிர்மருங்கூர் கிராமத்தை அடுத்துள்ள பாகனவயல் கிராமத்தில் தனியாக வீட்டில் இருந்த மூதாட்டி ஜெயசீலி (வயது75) கட்டி லில் பிணமாக கிடந்தார்.
தகவல் அறிந்த ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி னர்.
கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் மூத்த மகன் கொத்தனார் வேலை செய்து வரும் அருள் செல்வத்திடமும் (48) விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். சந்தேகம் அடைந்த போலீ சார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது தாைய அடித்து கொன்றதை அவர் ஒப்புக் கொண்டார். அவர் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனது தாயார் ஆடு விற்ற பணம், பயிர் இன்சூ ரன்ஸ் பணம் ஆகிவற்றை இளைய மகனுக்கும், மகளுக்கும் கொடுத்து வந்தார். எனக்கு எதுவும் கொடுக்கவில்லை. அப்பா வின் பெயரில் வங்கியில் இருந்த பணத்தை தாயிடம் தொடர்ந்து கேட்டு வந் ஆனால் அவர் கொடுக்காமல் மறுத்து வந்தார்.
இதனால் அவர் மீது கோபத்தில் இருந்தேன். சம்பவத்தன்று மீண்டும் தாயிடம் பணம் கேட்டேன். ஆனால் அவர் பணம் கொடுக்க முடியாது என கூறினார். இதனால் ஆத்திரத்தில் அவரை விறகு கட்டையால் தலையில் அடித்தேன். அதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்