என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது
    X

    மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது

    • பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    • மாணவியை திருமணம்செய்து கொள்வதாகக் கூறி நெருங்கிப் பழகி பாலியல் தொல்லை கொடுத்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள மைகுண்டு ராவுத்தா் அப்பா தெருவைச் சோ்ந்தவா் மீனவா் வேலுச்சாமி. இவரது மகன் திலீப் (23). கூலித் தொழிலாளியான இவா், வாணியங்குளம் பகுதியில் வசிக்கும் 16 வயது பள்ளி மாணவியுடன் பழகினாா்.

    மாணவியை திருமணம்செய்து கொள்வதாகக் கூறி நெருங்கிப் பழகி பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும் அந்த சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்து திலீப் மிரட்டினார். இது குறித்து மாணவி, பெற்றோரிடம் புகார் செய்தார். அதன்பேரில் உச்சிப்புளி போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து திலீப்பை கைது செய்தனா்.

    Next Story
    ×