search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமக்குடியில் உயிருக்கு போராடிய பெண் மான் மீட்பு
    X

    பரமக்குடியில் உயிருக்கு போராடிய பெண் மான் மீட்பு

    • பரமக்குடியில் உயிருக்கு போராடிய பெண் மான் மீட்கப்பட்டது.
    • தெரு நாய்கள் கடித்ததால் அந்த மான் காயம் அடைந்திருப்பது தெரியவந்தது.

    பரமக்குடி

    பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட 1-வது வார்டு மஞ்சள்பட்டிணம் பகுதியில் அதிகாலை வீடுகளின் அருகே உயிருக்கு போராடி கொண்டிருக்கும் பெண் மானை பார்த்த அப்பகுதி மக்கள் வருவாய்த்துறை, காவல்துறை, வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

    வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த மானை மீட்டனர். உடனடியாக பெண்மானை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு முதலுதவிக்காக பரமக்குடியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்து வருகின்றனர்.

    தெரு நாய்கள் கடித்ததால் அந்த மான் காயம் அடைந்திருப்பது தெரியவந்தது.

    Next Story
    ×