என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாடகை கட்டிடத்தில் செயல்படும் ரேசன் கடை.
ரேசன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை
- ரேசன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
- அபிராமம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் பேருராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரேசன்கடை கடந்த சில வருடங்களாக தனியார் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த ரேசன்கடை மூலம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேசன் குடும்ப அட்டைதாரர்கள பயனடைந்து வருகின்ற னர். ரேசன்கடை வாடகை கட்டிடத்தில் செயல்படு வதால் அடிக்கடி ரேசன் கடையை இடமாற்றம் செய்து வருகின்றனர்
இதனால் ரேசன் கடைக்கு பொருட்கள் வாங்க செல்லும் முதிய வர்கள், மாற்றுதிற னாளிகள், பெண்கள் என அனைவரும் அலைக்கழிக்கப்படு கிறார்கள். எனவே அரசுக்கு சொந்தமான இடத்தில் புதிய ரேசன்கடை கட்டிடம் கட்டி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அபிராமம் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுெதாடர்பாக சமூக ஆர்வலர் அருணாச்சலம் கூறுகையில், அபிராமம் பேருராட்சி பகுதியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்ற னர். இங்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் 2 ரேசன் கடைகளும், ராம்கோ மூலம் ஒரு ரேசன் கடையும் என மொத்தம் 3 ரேசன்கடைகள் செயல்பட்டு வருகிறது.
3 ரேசன்கடைகளிலும் 2000 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட ரேசன்கார்டுகள் உள்ளன. இந்த 3 கடையும் வாடகை கட்டிடத்தில்தான் இன்றுவரை செயல்பட்டு வருகின்றன.
எனவே அனைவரும் பயனடையும் வகையில் 3 ரேசன் கடைகளையும் அரசுக்கு சொந்தமான இடத்தில் அமைத்து தர ேவண்டும் என்றார்.