என் மலர்
உள்ளூர் செய்திகள்

மீனவ குடும்பத்திற்கும் நிவாரண நிதி உதவிகள்
- மீனவ குடும்பத்திற்கும் நிவாரண நிதி உதவிகள் வழங்க வேண்டும்.
- நாட்டுப்படகு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் தேசிய கடல் மீனவர், மீனவ மகளிர் சேமிப்பு நிவாரண திட்டத்தின் கீழ் நாட்டுப்படகு மீனவர் பங்குத்தொகை செலுத்தி வருகின்றனர். இதனால் வறட்சி நிவா ரணம் கடலில் இறந்தால் நிவாரண நிதி போன்ற அரசு வழங்கும் இழப்பீடு வழங்கப்படுகிறது.
பெரும்பாலும் இப்பகுதி மீனவர்கள் கல்வியில் பின் தங்கி கடல் சார்ந்த தொழி–லில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு சில மீனவர்களே படித்து வேறு தொழிலுக்கு செல்கின்றனர். அதிலும் ஒரு சிலரே படித்து அரசு தொழிலுக்குச் செல்வார் கள்.
இந்நிலையில் ஒரு குடும் பத்தில் குடும்ப உறுப்பி–னர்களாக பலர் உள்ள நிலையில், அதில் ஒருவர் அரசு பணி செய்தாலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேமிப்பு மற்றும் நிவாரண நிதி மறுக்கப்படுகிறது.
இதனால் வறட்சி நிவாரண நிதி, கடல் சீற்றங்களால் மீன்பிடிக்கும் போது கடலில் இறந்தால் வழங்கும் நிதியும் மறுக்கப்ப–டுகிறது.
தொண்டி பகுதியில் உள்ள சிலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிள்ளைகளைகளை படிக்க வைப்பது தவறா? மேலும் அவ்வாறு அரசு பணி மேற்கொள்ளும் நபர் திரு–மணமாகி குடும்பத்தை கவனிக்காமல் செல்லும் நிலையும் உள்ளது.
எனவேஅரசு பணி மேற்கொள்வதால் குடும்பத் தில் அனை வருக்கும் நிதி மறுக்கப்படுவதை அரசு மறு பரிசீலனை செய்ய வேண் டும் என அரசுக்கு இப்பகுதி நாட்டு படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






