என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொண்டி, திருவாடானையில் பிரதோச வழிபாடு
- தொண்டி, திருவாடானையில் பிரதோச வழிபாடு நடந்தது.
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளையில் உள்ள அன்னபூரனேஸ்வர சமேத நம்பு ஈஸ்வரர் கோவிலில் பிரதோசம் நடந்தது. இதைெயாட்டி நந்திக்கு பால், பழம், பன்னீர், தேன், சந்தனம், விபூதி, அரிசி மாவு ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பரிவார தெய்வங்களான விநாயகர், முருகன், நாகநாதர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, பைரவர், கல்யாண நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பூஜை ஏற்பாடுகளை வாசு, சுவாமிநாதன் செய்திருந்தனர். சர்க்கரை பொங்கல், எள் சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
அதே போல தொண்டி சிதம்பரேஸ்வரர், திருவாடானை ஆதி ரெத்தினேஸ்வர், தீர்த்தாண்டதானம் சர்வதீர்த்தேஸ்வரர், ஓரியூர் சேயுமானவர் ஆகிய சிவன் கோவில்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






