என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமநாதபுரம், ரெகுநாதபுரம் பகுதிகளில் நாளை மின்தடை
    X

    ராமநாதபுரம், ரெகுநாதபுரம் பகுதிகளில் நாளை மின்தடை

    • ராமநாதபுரம், ரெகுநாதபுரம் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்.
    • ஆர்.எஸ். மடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் (நகர்) பாலமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ். மடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுவதால் இந்த துணை மின் நிலையம் வழியாக மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளான சக்கரக் கோட்டை, சின்னக்கடை, புலிக்காரத்தெரு, பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், கேணிக்கரை சுற்றியுள்ள பகுதிகள்.

    தாயுமான சாமி கோவில் தெரு, வண்டிக்காரத்தெரு, தங்கப்பா நகர், அண்ணா நகர், அரசு மருத்துவமனை, அரண்மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி சுற்றியுள்ள பகுதிகள், முதுநாள் ரோடு, சூரன் கோட்டை, இடையார் வலசை, சிவன்கோயில் சுற்றியுள்ள பகுதிகள்.

    சாலை தெரு, சர்ச், மார்க்கெட், யானைக் கல் வீதி, கே.கே.நகர், பெரிய கருப்பன் நகர், கோட்டை மேடு சிங்காரதோப்பு, தினமலர் நகர், பெரியார் நகர், லாந்தை, அச்சுந்தன் வயல், நொச்சிஊரணி, பயோனீயர் சுற்று பகுதிகளில், பெரியகருப்பன் நகர், கோட்டைமேடு, எட்டிவயல்.பட்டினம்காத்தான், ஆதம்நகர் போக்குவரத்து நகர், கழுகூரணி, சாத்தான் குளம் ஆகிய பகுதிகளிலும் ரெகுநாதபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறு வதால் ரெகுநாதபுரம், தெற்குகாட்டூர் தெற்கு வாணிவீதி படைவெட்டி வலசை பூசாரிவலசை ராமன்வலசை கும்பரம் இருட்டூரணி வெள்ளரி ஓடை சேதுநகர் காரான் முத்துப்பேட்டை பெரியபட்டணம்.

    தினைக்குளம், வள்ளிமாடன் வலசை, வண்ணான் குண்டு, பத்ராத ரவை, நயினா மரைக்கான், சேதுநகர், பிச்சா வலசை, உத்தரவை, தாதனேந்தல் ஆகிய பகுதிகளிலும் நாளை (6-ந்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×