என் மலர்
உள்ளூர் செய்திகள்

பனைக்குளம், உச்சிப்புளி பகுதியில் நாளை மின்தடை
- பனைக்குளம், உச்சிப்புளி பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
- இந்த தகவலை ராமநாதபுரம் (பொறுப்பு) உதவி செயற்பொறியாளர்/ ஊரகம் சோம சுந்தரம் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் துணை மின் நிலையத்தில் உள்ள பனைக்குளம் உயர் மின்பாதையில் நாளை (15-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே ஆற்றாங்கரை, அழகன்குளம், பனைக்குளம், புதுவலசை, தேர்போகி மற்றும் அத்தியூத்து ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.
இதே போல் பெருங்குளம் துணை மின் நிலையத்தில் உள்ள கீழ நாகாச்சி உயர் மின்பாதையில் நாளை (15-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் உச்சிப்புளி, கீழ நாகாச்சி, செம்படையார்குளம், தாமரைக்குளம், இரட்டையூரணி, புதுமடம், இருமேனி, பிரப்பன்வலசை, மானாங்குடி, நொச்சியூரணி. எஸ். கே. வலசை, ஆகிய மேற்கண்ட பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.
இந்த தகவலை ராமநாதபுரம் (பொறுப்பு) உதவி செயற்பொறியாளர்/ ஊரகம் சோம சுந்தரம் தெரிவித்துள்ளார்.






