என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதிய டிரான்ஸ்பார்மரை முருகேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- புதிய டிரான்ஸ்பார்மரை முருகேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பரமக்குடி
பரமக்குடி நகர் தெற்கு பிரிவுக்கு உட்பட்ட பொன்னையாபுரம் எம்.ஜி.ஆர்.நகரில் மின்சார வாரிய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4.5 லட்சம் செலவில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. அதை முருகேசன் எம்.எல்.ஏ. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, 30-வது வார்டு கவுன்சிலர் மாரியம்மாள் மும்மூர்த்தி, கோட்ட செயற்பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி, உதவி செயற்பொறியாளர் (நகர்) கங்காதரன், உதவி மின் பொறியாளர் சத்தியேந்திரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story






