search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் பற்றாக்குறையால் ரோந்து பணியில் தொய்வு
    X

    போலீஸ் பற்றாக்குறையால் ரோந்து பணியில் தொய்வு

    • போலீஸ் பற்றாக்குறையால் ரோந்து பணியில் தொய்வு ஏற்பட்டது.
    • இதனால், திருட்டு சம்பவங்கள். திருடர்கள், சமூக விரோதிகள் நடமாட்டம் குறைந்திருந்தது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட போதுமான போலீசார் இல்லாததால் குற்றச்சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. கீழக்கரை பகுதியில் விரிவாக்க பகுதிகள் அதிகம் உருவாகின்றன. போலீஸ் நிலையத்தில் அதிகாரிகளை தவிர போலீசார் பற்றாக்குறை அதிகமாக உள்ளது.

    பணியில் உள்ள போலீசாரும் பல்வேறு பாதுகாப்பு பணிகளுக்கு சென்று விடுவதால், இரவு நேர ரோந்து பணிகளில் ஈடுபட முடியவில்லை.முன்பு நகர் பகுதிகளில் தினமும் போலீசார் ரோந்து வந்தனர். இதனால், திருட்டு சம்பவங்கள். திருடர்கள், சமூக விரோதிகள் நடமாட்டம் குறைந்திருந்தது.

    தற்போது ரோந்து பணியில் போலீசார் ஈடுபடும் நாட்கள் குறைவாகவே உள்ளது. இதை சாதகமாக்கி வீடு புகுந்து திருடுவது, செயின் பறிப்பு சம்பவங்களும், சில நேரங்களில் கொலைகளும் நடக்கின்றன. ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் நிர்வாகம் கீழக்கரையில் போதுமான போலீசாரை நியமித்து ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×