search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அபிராமம் பகுதியில் பருத்தி சாகுபாடி
    X

    அபிராமம் பகுதியில் பருத்தி சாகுபாடி

    • அபிராமம் பகுதியில் பருத்தி சாகுபாடி செய்யப்பட்டுள்ளது.
    • பருத்தி செடியில் இலை சுருட்டல், காய்புழு போன்ற நோய் தாக்குதலால் பருத்தி விவசாயமும் பாதிக்கப்படுகிறது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் நெல் அறுவடைக்கு பிறகு கண்மாய், குளம், ஊரணிகளில் தேங்கி உள்ள தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் பருத்தி நடவு செய்துள்ளனர். பருத்தி செடியை பொறுத்தவரை லேசான ஈரப்பதத்திலும், கடும் வறட்சி நிலையிலும் அதிக மகசூல் தரக்கூடிய தன்மை உடையது. இருந்தபோதிலும் இந்த ஆண்டு தொடர் மழையால் பருத்தி விவசாயம் பாதிப்படைந்து உள்ளது.

    இதுபற்றி அபிராமம் பகுதியைச் சேர்ந்த பருத்தி விவசாயி கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் நெல் அறுவடைக்கு பின் கோடை காலங்களில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய பருத்தி விவசாயத்தை செய்து வந்த நிலையில், இந்தப்பகுதியில் இந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யததால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது. தற்போது பருத்தி சாகுபடி செய்துள்ளோம். பருத்தி செடியில் இலை சுருட்டல், காய்புழு போன்ற நோய் தாக்குதலால் பருத்தி விவசாயமும் பாதிக்கப்படுகிறது. இதனால் மிகவும் பொருளதார நஷ்டம் ஏற்படுவதுடன் மன உளைச்சலும் ஏற்படுகிறது என்றனர்.

    Next Story
    ×