என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ராமநாதபுரத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு
- ராமநாதபுரத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
- முஹம்மது மீரா சாஹிப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மண்டபம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கலோனியர் பங்களா அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் மூர்த்தி ஆகியோர் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர்கள் நிருபர்களிடம் தெரிவித்ததா வது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 17, 18-ந்தேதிகளில் ராமநாத புரம் மாவட்டத்தில் நடை பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். 17-ந் தேதி அன்று ராமநாதபுரத்தில் நடைபெறும் பாக முக வர்கள் கூட்டத்தில் பங் கேற்க உள்ளார்.
அதனை தொடர்ந்து 18-ந்தேதி மண்டபம் கலோனியர் பங்களா அருகில் நடைபெறும் நிகழ்ச்சியில் மீனவர்களை சந்திக்க உள்ளார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ராமநாதபுரம் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராம லிங்கம், பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், உதவி கலெக்டர் (பயிற்சி) சிவா னந்தம், தி.மு.க மாநில விவசாய அணி துணைச் செயலாளரும், முதுகுளத் தூர் முன்னாள் எம்.எல்.ஏ. வுமான முருகவேல், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இன்பா ரகு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கவுன்சிலர் ரமேஷ் கண்ணன், மண்டபம் பேரூர் செயலாளர் அப்துல் ரஹ்மான் மரைக்கா யர், கவுன்சிலர்கள் சாதிக் பாட்ஷா, வாசிம் அக்ரம், முஹம்மது மீரா சாஹிப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்