search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ம.க செயற்குழு கூட்டம்
    X

    பா.ம.க செயற்குழு கூட்டம்

    • பா.ம.க செயற்குழு கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் தொண்டி பேரூராட்சியில் நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜ் தலைமை தாங்கி னார். மாவட்ட தலைவர் சந்தனதாஸ், தொழிற்சங்க செயலாளர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். சிறப்பு அழைப் பாளராக மாவட்ட செயலா ளர் தேனி.சை.அக்கிம் கலந்து கொண்டார்.மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர் வர வேற்றார்.

    சென்னையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு கைகளை இழந்த ராமநாத புரம் மாவட்ட குழந்தைக்கு சிறந்த மருத்துவ சேவை அளிக்க வேண்டும் அவர் களுக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்க வேண்டும் மேலும் இது விஷயமாக மாநில சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீதி வேண் டும் என்றால் நீதிமன்றம் செல்லுங்கள் என்று கூறி யதை வன்மையாக கண்டிக் கிறோம்.

    அலட்சியமாக இருந்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யென்றால் ராமநாதபுரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மாபெரும் போராட்டம் நடைபெறும். தேவிபட்டினம் ஊராட்சி நவபாசானம் செல்லும் வழியில் மாநிலங் களவை உறுப்பினர் அன்பு மணி ராமதாஸின் நிதியி லிருந்து உயர் கோபுர விளக்கு அமைப்பது என்றும், வருகிற 25-ந் தேதி பசுமைத் தாயகம் நாளான பா.ம.க நிறுவனர் ராம தாஸின் பிறந்தநாளில் திரு வாடானை ஒன்றியம் பகுதி யில் 100 மரக்கன்றுகள் நட்டு, 10 இடங்களில் கட்சி கொடி ஏற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    முடிவில் ஒன்றிய தலைவர் மணி என்ற ஞானப்பிரகாசம் நன்றி கூறினார்.

    திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தூம், ராம நாதபுரம் மாவட்ட செயலா ளர் பாலா, ராமநாதபுரம் ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் கார்த்தி மற்றும் திருவாடானை ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×