search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை
    X

    ராமநாதபுரம் பாசி பட்டறை தெருவில் உள்ள ஜிம் ஆ பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. 

    பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.
    • குர்பானி வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 200க்கும் மேற்பட்ட ஜூம்ஆ பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.

    இறைத்தூதர் இபுராகிம் (அலை) தியாகத்தை கொண்டாடும் வகையில் முஸ்லிம் மக்கள் ஆண்டு தோறும் துல்ஹஜ் மாதம் பிறை 10ல் பக்ரீத் பண்டிகையை தியாகத் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து இன்று காலை 7 மணி முதல் தக்பீர் முழக்கத்துடன் மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேலான பள்ளிவாசல்கள் மற்றும் திறந்தவெளி மைதானங்க ளில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    தொடர்ந்து பள்ளிவா சலில் பேஷ் இமாம்கள் பக்ரித் பண்டிகையின் சிறப்புகள் குறித்து பயான் (சொற்பொழிவு) நடைபெற்றது. பின்பு உலக மக்களின் அமைதிக்காகவும், மத நல்லிணக்கம் தொட ரவும் சிறப்பு துவா (பிரார்த்தனை) நடை பெற்றது.

    இதை தொடர்ந்து வீடுகளில் ஆடு, மாடுகள் குர்பானிக்காக அறுக்கப் பட்டு அதன் இறைச்சிகளை உறவினர்க ளுக்கும், ஏழைகளுக்கும் வழங்கினர்.

    ராமநாதபுரத்தில் வெளிப்பட்டணம், சின்னக்கடை, பாரதி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலும், கீழக்கரையில் தெற்குத்தெரு, நடுத்தெரு, பழைய குத்பா பள்ளி, வடக்குத்தெரு, மேலத்தெரு உள்பட 13க்கும் அதிகமான பள்ளிவாசல்களில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதே போல் பனைக்குளம், என்ம னங்கொண்டான், ஏர்வாடி, மண்டபம், பாம்பன், ராமேசுவரம், பெருங்குளம், பெரிய பட்டினம், தேவிபட்டினம், சித்தார் கோட்டை, அழகன்குளம், தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளிவா சல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகை முடிந்ததும் சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஒருவருக்கொ ருவர் கட்டியணைத்து பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

    தொண்டி

    தொண்டியில் இன்று பக்ரீத் பண்டிகை உற்சாக மாக கொண்டாடப்பட்டது. பள்ளிவாசல்களில் பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் சிறப்பு தொழுகையில் ஈடு பட்டனர். மேலும் முஸ்லிம் கள் ஒருவருக்கொருவர் பக்ரீத் பண்டிகை வாழ்த்துக் களை தெரிவித்து கொண்ட னர். மேலும் ஏழைகளுக்கு குர்பானி வழங்கப்பட்டது.

    விருதுநகர்-சிவகங்கை

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, நரிக்குடி, வீரசோழன், காரேந்தல், ராஜபாளையம், சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பக்ரீத் பண்டி கையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லீம்கள் பங்கேற்றனர்.

    சிவகங்கை மாவட்டத்தி லும் இன்று காலை பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழு கையில் திரளானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×