search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழிப்புணர்வு சதுரங்க போட்டி
    X

    விழிப்புணர்வு சதுரங்க போட்டியை போலீஸ் டி.எஸ்.பி. சின்னகண்ணு தொடங்கி வைத்தார்.

    விழிப்புணர்வு சதுரங்க போட்டி

    • விழிப்புணர்வு சதுரங்க போட்டியை போலீஸ் டி.எஸ்.பி. தொடங்கி வைத்தார்.
    • அனைத்து ஏற்பாடுகளையும் உடற்கல்வி ஆசிரியர் பாலசுந்தரம் செய்திருந்தார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்ப ள்ளியில் முதுகுளத்தூர் ஒன்றியத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகளிடையே விழிப்புணர்வு சதுரங்க போட்டி நடந்தது.

    போலீஸ் டி.எஸ்.பி. சின்னகன்னு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் சந்தனவேல், பயிற்சி டி.எஸ்.பி. ஆர்லியாஸ் ரெபோனி முன்னிலை வகித்தனர்.

    விளங்குளத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ் வரவேற்றார் இதில் 22 பள்ளிகளைச் சேர்ந்த 56 மாணவர்களும், 48 மாணவிகளும் கலந்து கொண்டனர். 6, 8-ம் வகுப்பு பிரிவில் முதல் பரிசு காக்கூர் செல்வப்பாண்டி, 2-ம் பரிசு விளங்குளத்தூர் வெற்றிவேல், 3-ம் பரிசு முதுகுளத்தூர் விஷ்வா ஆகியோர் வென்றனர்.

    மாணவிகள் பிரிவில் முதல் பரிசு உலையூர் ஜெனி ஸ்ரீ, 2-ம் பரிசு காக்கூர் மாலினி, 3-ம் பரிசு விளங்குளத்தூர் சங்கீதா ஆகியோர் பெற்றனர். 9-10-ம் வகுப்பு பிரிவில் முதலிடம் அலங்கானூர் முத்துகுமார், 2-ம் இடம் கீரனூர் அருண்குமார், 3-ம் இடம் கீரனூர் டேனில் ஆகியோர் பெற்றனர்.

    10 -12-ம் வகுப்பு மாணவர் பிரிவில் முதல் பரிசு கீழத்தூவல் எழில்வேந்தன், 2-ம் பரிசு அலங்கானூர் ஹரீஷ் திவாகர், 3-ம் பரிசு அலங்கானூர் ஸ்ரீராம், 11 - 12 மாணவிகள் பிரிவில் முதல் பரிசு கீழத்தூவல் நிவேதா, 2-ம் பரிசு முதுகுளத்தூர் சிவபாரதி, 3-ம் பரிசு அலங்கானூர் அங்காளஈஸ்வரி, 9-10-ம் வகுப்பு மாணவிகள் பிரிவில் முதல் பரிசு கீழத்தூவல் மகாலட்சுமி, 2-ம் பரிசு காக்கூர் பவனா, 3-ம் பரிசு விளங்குளத்தூர் முத்துப் பிரியா ஆகியோர் பெற்றனர்.

    சதுரங்க விளையாட்டுப் போட்டியில் 5 உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அனைத்து ஏற்பாடுகளையும் உடற்கல்வி ஆசிரியர் பாலசுந்தரம் செய்திருந்தார்.

    Next Story
    ×