என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியநாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    அரியநாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • அரியநாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை சேர்ந்த கோட்டை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோட்டை கிராமத்தில் அரியநாச்சியம்மன், இருளப்பசுவாமி, கருப்பணசுவாமி, கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 13-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு 2 கால யாக சாலை பூஜைகள் நடந்தன.

    தொடர்ந்து கடம்புறப்பாடு நடைபெற்று கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சேர்ந்த கோட்டை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×