search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
    X

    பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

    • பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.

    பரமக்குடி

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் ராமநாதபுரம் பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி லக்சிதா ஸ்ரீ 579 மதிப்பெண்களும், மாணவர்கள் அதீஸ்வரன் 576 மதிப்பெண்களும், பாலாஜி 571 மதிப்பெண்களும் பெற்றனர்.

    அதேபோல் தரணி என்ற மாணவி பொருளியல், கணக்குப்பதிவியல் ஆகிய படங்களில் தலா 100 மதிப்பெண்களும், மாணவன் பிரவீன் பாண்டி வணிகவியல், வரலாறு ஆகிய பாடங்களில் தலா 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். தனுஸ்ரீ என்ற மாணவி கணிப் பொறியியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும், மாணவி துர்கா கணிப்பொறியியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும், மாணவன் இந்திரஜித் தாவரவியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும், மாணவி பிரியா வணிகவியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும் பெற்றனர்.

    இந்த மாணவ-மாணவிகளை பள்ளியின் கல்வி குழு தலைவர் ராசி போஸ், இணைத்தலைவர் பாலுசாமி, பள்ளியின் தாளாளர் லெனின் குமார், ஆயிர சபை செயலாளர் செல்வராஜ், கவுரவ செயலாளர் வக்கீல் செந்தில்குமார், தலைமை ஆசிரியர் ஜஸ்டின் ஞானசேகர், உதவி தலைமை ஆசிரியை சுமதி, கல்விக்குழு உறுப்பினர்கள் சுதர்சன், பூபாலன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.

    Next Story
    ×