search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வல்லபை அய்யப்பன் ஆலய வருடாபிஷேக விழா
    X

    வல்லபை அய்யப்பன் ஆலய வருடாபிஷேக விழா

    • ராமநாதபுரம் அருகே வல்லபை அய்யப்பன் ஆலயத்தில் வருடாபிஷேக விழா நடந்தது.
    • பகல் 12 மணிக்கு மூலவர் அய்யப்பனுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவி லில் 2017-ம் ஆண்டு 2-வது முறையாக கும்பாபி ஷேகம் நடந்தது. நேற்று வருடாபிஷேகத்தை முன்னிட்டு வல்லபை அய்யப்பன் கோவிலில் கணபதி ஹோமம் அஷ்டாபிஷேகம் நடந்தது.

    வல்லபை விநாயகர், மஞ்சமாதா, ஆஞ்சநேயர், சங்கரன் சங்கரி, முருகன், பெரிய கடுத்த சாமி, சிறிய கடுத்த சாமி, கருப்பாயி அம்மாள், நவகிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

    நேற்று பகல் 12 மணிக்கு மூலவர் அய்யப்பனுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. பூஜைகளை தலைமை குருசாமி மோகன் செய்தி ருந்தார். ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை அயப்பன் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×