search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் பட்டியலில்  ஆதார்  இணைக்கும் பணி தொடக்கம்
    X

    வாக்காளர் பட்டியலில் ஆதார் இணைக்கும் பணி தொடக்கம்

    • வாக்காளர் பட்டியலில் ஆதார் இணைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
    • ​எனவே, அனைத்து வாக்காளர்களும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    ராமநாதபுரம் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் தனித்தகவல்களை உறுதிப்படுத்திடவும், ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இரு வேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது இருவேறு தொகுதிகளில் இடம் பெறுதலை தவிர்க்கும் பொருட்டும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இன்று(1-ந் தேதி ) தொடங்கி வருகிற 31-ந் தேதி வரை நடைபெறும்.

    ராமநாதபுரம் மாவ ட்டத்திற்குட்பட்ட 4 சட்ட மன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள வாக்கா ளர்கள் தாமாக முன்வந்து https://www.nvsp.in என்ற இணையதளத்தில் அல்லது வோட்டர் ஹெல்ப் லைன் என்ற செயலி மூலமாக அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் களப்பணியின் போது, படிவம் 6டி-ஐ கொண்டுவரும் போது மேற்கண்ட படிவத்தினை பூர்த்தி செய்து கொடுத்தும், வாக்காளர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், வாக்காளர் உதவி மையம் மற்றும் இ-சேவை மையம் ஆகியவைகளை அணுகியும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம். ​எனவே, அனைத்து வாக்காளர்களும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×