search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுமைப்பெண் திட்டத்தில் 375 மாணவிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை
    X

    உதவித்தொகைக்கான ஆணையை மாணவிக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார். அருகில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உள்பட பலர் உள்ளனர்.

    புதுமைப்பெண் திட்டத்தில் 375 மாணவிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை

    • ராமநாதபுரத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 375 மாணவிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்பட்டது.
    • இதனை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்ட தொடக்க விழா நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜகண்ணப்பன் கல்லூரி மாணவிகளுக்கு உதவித்தொகைக்கான ஏ.டி.எம். கார்டுகள், புதுமைப்பெண் பெட்டகத்தை வழங்கினார்.

    விழாவில் அவர் பேசுகையில், முதல்-அமைச்சர் வரலாற்று சிறப்புமிக்க திட்டமான புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு தொழில் கல்வி ஆகியவற்றில் இடை நிற்றல் இன்றி கல்வி பயின்று படிக்கும் வரை மாதம் ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.

    இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். எனவே மாணவிகள் அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும் என்றார்.

    ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன்குமார், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன், மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து, முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திக் மற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×