என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வேனில் கடத்திய 2,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
- ராமநாதபுரம் அருகே வேனில் கடத்திய 2,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
- வேனை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓடினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே கடலோர பாதுகாப்பு குழுமபிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் திருப்புல்லாணி சோதனை சாவடியில் இன்று அதிகாலை 3 மணியளவில் வாகன சோதனை நடத்தனர்.
அப்போது அந்த வழியாக ரெகுநாதபுரத்தில் இருந்து இ.சி.ஆர். சாலையில் செல்ல முயன்ற ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால் டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றார். அவரை போலீசார் விரட்டிச்சென்றனர். அவர் உத்திரகோசமங்கை சாலையில் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றார்.
அந்த வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் 50 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் 2,500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அரிசி மூட்டைகளை கைப்பற்றிய போலீசார் தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட அரிசி மூட்டைகளையும், வாகன த்தையும் ராமநாதபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்