search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வில் புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் சாதனை
    X

    முதல் 3 இடங்களை பிடித்த ஹரி சபாபதி, ஹர்ஷன், ராஜநிவிஷா.


    சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வில் புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் சாதனை

    • புஷ்பலதா பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் 95 பேரும், இயற்பியலில் 69 பேரும், வேதியியலில் 57 பேரும், உயிரியலில் 50 பேரும், கணித பாடத்தில் 29 பேரும் ஏ1 கிரேடு எடுத்து உள்ளனர்.
    • கணினி அறிவியலில் 21 பேரும் பொருளாதாரத்தில் 11 பேரும் கணக்குப்பதிவியலில் 9 பேரும், வணிக ஆய்வுகள் பாடத்தில் 3 பேர், தகவல் நடைமுறைகள் 3 பேரும், பயன்பாட்டு கணிதத்தில் ஒரு மாணவரும் ஏ1 கிரேடு எடுத்து உள்ளனர்.

    நெல்லை:

    பாளை புஷ்பலதா வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) 2022-ம் ஆண்டு நடத்திய பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஹரி சபாபதி என்ற மாணவன் 500-க்கு 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

    மேலும் இவர் இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஹர்ஷன் என்ற மாணவன் 492 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

    இவர் இயற்பியல் பாடப்பிரிவில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவி ராஜ நிவிஷா 488 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடம் பிடித்தார். இந்த தேர்வில் இயற்பியல் பாடத்தில் 4 மாணவர்களும், வேதியியலில் 2 மாணவர்களும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    இப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் 95 பேரும், இயற்பியலில் 69 பேரும், வேதியியலில் 57 பேரும், உயிரியலில் 50 பேரும், கணித பாடத்தில் 29 பேரும் கணினி அறிவியலில் 21 பேரும் பொருளாதாரத்தில் 11 பேரும் கணக்குப்பதிவியலில் 9 பேரும், வணிக ஆய்வுகள் பாடத்தில் 3 பேர், தகவல் நடைமுறைகள் 3 பேரும், பயன்பாட்டு கணிதத்தில் ஒரு மாணவரும் ஏ1 கிரேடு எடுத்து உள்ளனர்.

    சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் புஷ்பலதா பூரணன் , முதல்வர் புஷ்பவேணி அய்யப்பன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

    Next Story
    ×