என் மலர்
உள்ளூர் செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க விண்ணப்பிக்க சிறப்பு முகாம்
- கறம்பக்குடி பகுதியில் வீடு இல்லாத ஏழைகள்டுக்குமாடி குடியிருப்பில் வசிக்க விண்ணப்பிக்க சிறப்பு முகாம்
- 96 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுப்பட்டு வருகின்றன.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் திருச்சி கோட்டம், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட கறம்பக்குடி பேரூராட்சியில் ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 96 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுப்பட்டு வருகின்றன.
இந்த குடியிருப்புகளுக்கு நீர்நிலை மற்றும் ஆட்சேபகரமான புறம்போக்கு பகுதியில் வசித்து வரும் ஆக்கிரமிப்புதாரர்களை மறு குடியமர்வு செய்ய முன்னுரிமை அளிக்கப்படும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பயனாளிகள், மாற்றுத்திறனாளிகள், கட்டுமான தொழிலாளர்கள், நல வாரிய உறுப்பினர்கள், தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் நகர்புற வீடற்ற ஏழைகளுக்கும் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கும் முன்னுரிமை அளித்து மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் பெறப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்கப்பட உள்ளது.
மத்திய மாநில அரசுகளின் பங்களிப்பு தொகை போக மீதமுள்ள ரூ.2.44 லட்சத்தை பயனாளிகள் பங்களிப்பு தொகையாக வழங்க வேண்டும். தகுதியானவர்கள் தங்கள் பெயரிலோ, குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ வேறு எங்கும் வீடு இல்லை எனவும் மாத வருமானம் ரூ.25 ஆயிரத்துக்குள் தான் என்பதற்கான சான்று அளிக்கப்பட வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர்கள் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி திட்டப்பகுதி, பட்டமாவிடுதி ரோடு செவ்வாய்ப்பட்டி, பிலாவிடுதி ஊராட்சி, கறம்பக்குடி பன்னீர் தேவர் மஹால் அருகில் சிறப்பு முகாம் நாளை (சனிகிழமை) மற்றும் நாளை மறு நாள் (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






