என் மலர்
உள்ளூர் செய்திகள்

மண்டிகிடக்கும் செடி கொடிகளை அகற்ற கோரிக்கை
- ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தில் மண்டிகிடக்கும் செடி கொடிகளை அகற்ற கோரிக்கை
- நோய் பரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சம்
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவ ட்டம் ஆலங்குடி தாசில்தார் அலுவலக வளாகத்தில் டி.எஸ்.ஓ. அலுவலகம், கருவூலம், இ சேவை மையம், தற்போது மகளிர் உரிமைத்தொகை கிடைக்கா தவர்கள் மனு கொடுக்கும் மையம் என பல்வேறு அலு வலகங்கள் செயல்பட்டு வருகின்றது.
இதனால் இங்கு நாள்தோ றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கி ன்றனர்.
இந்நிலையில் தாலுகா அலுவலக வளாகத்தில் நீண்ட காலமாக செடி கொடிகள் அடர்ந்து புதர் மண்டி கிடைக்கின்றது.
இதனால் விஷ பூச்சிகள், கொசுக்கள் அதிகமாக உற்ப த்தி ஆகின்றன. மேலும் டெங்கு கொசு உற்பத்தி யாகும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அலுவலகம் மட்டு மின்றி அதனை சுற்றியும் அதிக அளவில் வீடுகள் உள்ளன.
இதனால் வீடுகளில் வசி ப்போருக்கும் தாலுகா அலு வலக பகுதிக்கு வரும் பொது மக்களுக்கும் நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு ள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் தாலுகா அலுவல கத்தை சுற்றியுள்ள புதிர்க ளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொது மக்களும் சமூக ஆர்வலர்க ளும் கோரிக்கை விடுத்து ள்ளனர்.
இதேபோல் ஆலங்குடி யில் அரசு மற்றும் தனியாரு க்கு சொந்தமான பல்வேறு காலிமனைகளில் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் புதர் மண்டி கிடைக்கின்றன.
தற்போது மழைக்காலம் என்பதால் மழைநீர் தேங்கி டெங்கு கொசு உருவாகும் அபாயம் உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






