search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டை சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
    X

    புதுக்கோட்டை சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

    தீபாவளி பண்டிகையையொட்டிபுதுக்கோட்டை சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை அருகே உள்ள சிறுவாச்சூர் வாரந்தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். மற்ற நாட்களை விட, தீபாவளி, பொங்கல், பக்ரீத், ரம்ஜான் போன்ற பண்டிகை காலங்களில் ஆடு விற்பனை களைகட்டும். அதன்படி நாளை தீபாவளி பண்டிகையையொட்டி இறைச்சிக்காக 100க்கும் மேற்பட்ட ஆடுகள் திருச்சி, அரியலூர், கடலூர், தஞ்சாவூர் என பல் வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் இச்சந்தை களுக்கு கொண்டு வந்தனர். இவற்றை வாங்கி செல்வதற்கு ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர். அவர்கள் போட்டிப்போட்டு வாங்கிதாலும், ஆடுகளின் வரத்து குறைவாக இருந்ததாலும் ஆடுகளின் விலை அதிகரித்தது. ஒரு நாள் ஆடு விற்பனை ரூ.2 கோடி என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×