என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு
    X

    விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு

    கறம்பக்குடி பகுதியில் விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் சென்னை விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறை இயக்குனர் அறிவுறுத்தலின்படி திருச்சி விதை ஆய்வு துணை இயக்குனர் கோவிந்தராஜ் தலைமையில் தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் விநாயக மூர்த்தி மற்றும் விதை ஆய்வாளர்கள் மோகன் தாஸ், பிரகாஷ் , பாலையன், முனி யய்யா, நவீன் சேவியர், உள்ளிட்ட ஆய்வு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    விவசாயிகள் அனைவரும் உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் ரசீது பெற்று விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். விதை விற்பனை உரிமம் தராமல் விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.தனியார் விதை விற்பனையாளர்கள் விதைகளை விற்ற தற்கான ரசீது கட்டாயம் வழங்க வேண்டும். ரசீது இல்லாமல் விற்றாலோ கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ விதைச்சட்டம் 1966 ன் விதை விதிகள் மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை 1983 சட்டம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். இந்த ஆய்வில் 17 விதை விற்பனை நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது 11 விதை மாதிரிகள் முளைப்புத்திறன் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டு புதுக்கோட்டை விதை பரிசோதனை ஆய்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த ஆய்வில் விதை சட்ட விதிகளை மீறி விற்பனை செய்த ஆறு விதை குவியல்களுக்கு ரூபாய் 4.27 லட்சம் மதிப்புள்ள 7.61 மெட்ரிக் டன் விதைகளுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×