search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள்போராட்டம் 2-வது நாளாக நீடிப்பு
    X

    கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள்போராட்டம் 2-வது நாளாக நீடிப்பு

    • தீபாவளி போனஸ் கேட்டுகூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் போராட்டம் 2-வது நாளாக நீடிப்பு
    • இதில் நிரந்தர தொழிலாளர்கள் 22 பேர் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் 260க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி அருகே துரையரசபுரத்தில் அரசு கூட்டுறவு நூற்பாலை இயங்கி வருகிறது. இதில் நிரந்தர தொழிலாளர்கள் 22 பேர் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் 260க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்களுக்கு கடந்த ஆண்டுகள் வரை அரசு அறிவித்த பண்டிகை கால போனஸ் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தற்போது ஆலை நிர்வாகம் சார்பில் இந்தாண்டு தீபாவளி பண்டி கைக்கு தற்காலிக தொழிலா ளர்களுக்கு போனஸ் வழங் கப்பட மாட்டாது என அறிவித்ததாக கூறப்படு கிறது.

    இதனையடுத்து வேதனை அடைந்த தற்காலிக தொழி லாளர்கள், தாங்கள் ஏற்க னவே குறைந்த ஊதியத்திற்கு வேலை பார்த்து வருகின்ற சூழ்நிலையில் தற்போது தீபாவளி போனஸ் கிடை யாது என நிர்வாகம் கூறியி ருப்பதை கண்டித்து ஆலை வாயில் முன்பு கண்டன ஆர்பாட்டம் 2-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    ஆர்ப்பாட்டத்தில் தற்கா லிக தொழிலாளர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த பண்டிகை கால போனஸ் வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட் டது.

    ஆர்பாட்டத்தில் தமிழ் நாடு பஞ்சாலை தொழிலா ளர் சம்மேளன மாவட்ட தலைவர் அலாவுதீன், டிஎம்பிடிஎஸ் மாவட்ட செயலாளர் கர்ணா உள்ளிட்ட தற்காலிக தொழி லாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×