என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புதுக்கோட்டை எழில் நகரில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது
- சிதிலமடைந்த கட்டிடம் இடிப்பு: தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது
- பொக்லைன் எந்திரம் மூலம் நிலம் சமன் செய்யும் பணி கள் தொடங்க ப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்க ணக்கான பயணிகளும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் வந்து செல்கி ன்றனர்.
இந்த பேருந்து நிலைய த்தின் கட்டடங்கள் சிதல மடைந்து மேற்கூரைகள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இடிந்து விழுந்து வந்ததால் பொதுமக்களும் பயணிகளும் பெரும் அச்ச த்தோடு அந்த பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
இதற்கிடையே இந்த புதிய பேருந்து நிலையத்தில் காரைக்குடி பேருந்து நிற்கும் இடத்தில் உள்ள கடையின் முன்பு மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் அங்கு நின்று கொண்டிருந்த தஞ்சையை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செ ல்வம் மற்றும் அவரது தாயார் வெள்ளையம்மாள் ஆகியோர் படுகாயமடைந்த னர்.
இதையடுத்து சிதிலமடை ந்துள்ள பேருந்து நிலைய கட்டங்களை அசம்பாவி தங்கள் ஏற்படுவதற்கு முன்பு இடித்து அப்புற ப்படுத்திவிட்டு புதிய கட்ட டம் கட்ட வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்த னர்.
இந்நிலையில் சம்பவ இடத்தை நகராட்சி அதிகாரி கள் மற்றும் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா ஆகி யோர் பார்வையிட்டு ஆய்வு செய்து உடனடியாக சிதல மடைந்த கட்டடத்தை இடி த்து அப்புறப்படுத்த நட வடிக்கை மேற்கொண்டனர்.
மேலும் புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூ.19 கோடி நிதி ஒதுக்கப்ப ட்டுள்ளது. இதையடுத்து தற்போது மேற்கூரை இடிந்த பகுதியில் உள்ள 15க்கும் மேற்பட்ட கடைகள் உடனடியாக அங்கிருந்து காலி செய்யப்பட்டு கட்டி டத்தை சுற்றி பாதுகாப்பி ற்காக பச்சைத் துணியால் தடுப்புகள் அமைத்து ஜேசிபி டிரில்லர் உள்ளிட்ட இயந்திரங்கள் கொண்டு இடிக்கும் பணி தொடங்கியு ள்ளது.
பேருந்து நிலைய கட்டடம் இடித்து அப்புறப்படுத்து வதால் அங்கு கடைகள் வைத்துள்ளவர்கள் வாழ்வாதாரம் இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆகவே அவர்களுக்கு மாற்று வழியை ஏற்படுத்தி தர கோரிக்கை விடுக்க ப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து எழில் நகரில் 6 ஏக்கர் இடத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்க ப்பட்டுள்ளது. இதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் நிலம் சமன் செய்யும் பணி கள் தொடங்க ப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்