என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலைஞர் நூற்றாண்டு விழா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
- கலைஞர் நூற்றாண்டு விழா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
- அமைச்சர் மெய்யநாதன் அழைப்பு
புதுக்கோட்டை,
டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாளை (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.
இதில் தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் இன்டர்வியூ நடத்தி வேலைக்கு ஆட்களை தேர்வு செய்கிறார்கள்.
அமைச்சர் அழைப்பு
முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பங்கேற்கலாம் மேலும் ஐ.டி.ஐ.,டிப்ளமோ, நர்சிங் பார்மசி, பொறியியல் படித்தவர்களும் வேலைக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த வேலை வாய்ப்பு முகாமை படித்த ஆண்-பெண் இருபாலரும் பயன்படுத்தி வேலை வாய்ப்பினை பெறுமாறு தமிழக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். முகாமுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.






